Isaiah 12 (IRVT)
1 அக்காலத்திலே நீ சொல்வது:“யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்;நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது;நீர் என்னைத் தேற்றுகிறீர். 2 இதோ, தேவனே என் இரட்சிப்பு;நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்;கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்;அவரே எனக்கு இரட்சிப்புமானவர். 3 நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்துமகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். 4 அக்காலத்திலே நீங்கள் சொல்வது:யெகோவாவை துதியுங்கள்;அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்;அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்;அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள். 5 யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள்,அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்;இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். 6 சீயோனில் குடியிருக்கிறவளே,நீ சத்தமிட்டுக் கெம்பீரி;இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”