Psalms 112 (IRVT)
1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து,அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். 2 அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும்,செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். 3 செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்;அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். 4 செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்;அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். 5 இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான். 6 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்;நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன். 7 துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்;அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும். 8 அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்;அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான். 9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்;அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். 10 துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி,தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்;துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.