Psalms 110 (BOITCV)
undefined தாவீதின் சங்கீதம். 1 யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரைஉமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரைநீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.” 2 யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்;“நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!” 3 உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில்,தாங்களாகவே முன்வருவார்கள்;அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல்உமது வாலிபர்கள்பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள். 4 “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி,நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்”என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்;அவர் தமது மனதை மாற்றமாட்டார். 5 யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்;அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார். 6 அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்;இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார். 7 வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்;ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.