Psalms 110 (IRVT)
undefined தாவீதின் பாடல். 1 யெகோவா என் ஆண்டவரை நோக்கி:நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும்,நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார். 2 யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்;நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும். 3 உமது மகத்துவத்தின் நாளிலேஉம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்;அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள். 4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படிஎன்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்;மனம் மாறாமலுமிருப்பார். 5 உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர்,தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார். 6 அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்;எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்;அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார். 7 வழியிலே அவர் நதியில் குடிப்பார்;ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.