Psalms 124 (BOITCV)
undefined சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். 1 யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்: 2 மனிதர் நம்மை தாக்கும்போதுயெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், 3 அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது,அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே; 4 வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே,நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே, 5 பொங்கி வந்த வெள்ளம்நம்மீது பாய்ந்தோடியிருக்குமே. 6 அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காதயெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். 7 வேடனுடைய கண்ணியிலிருந்துதப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்;கண்ணி அறுந்தது,நாம் தப்பினோம். 8 வானத்தையும் பூமியையும் படைத்தவரானயெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.