Psalms 126 (BOITCV)
undefined சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 1 நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது,நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். 2 எங்கள் வாய்கள் சிரிப்பினாலும்,எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன.அப்பொழுது, “யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்”என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது. 3 யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்;அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம். 4 யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல,எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும். 5 கண்ணீருடன் விதைக்கிறவர்கள்,மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள். 6 விதைப்பதற்கான விதைகளைஅழுதுகொண்டு சுமந்து போகிறவன்,மகிழ்ச்சியின் பாடல்களுடன்கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான்.