Psalms 126 (IRVT)
undefined ஆரோகண பாடல். 1 சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது,கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். 2 அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும்,நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது;அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 3 யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம். 4 யெகோவாவே,தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல,எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும். 5 கண்ணீரோடு விதைக்கிறவர்கள்கெம்பீரத்தோடு அறுப்பார்கள். 6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்;ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டுகெம்பீரத்தோடு திரும்பிவருவான்.