Psalms 101 (BOITCV)
undefined தாவீதின் சங்கீதம். 1 யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்;உமக்கே நான் துதி பாடுவேன். 2 நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்;நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்? நான் குற்றமற்ற இருதயத்துடன்என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன். 3 தீங்கான செயல்களைநான் என் கண்முன் வைக்கமாட்டேன். உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்;அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது. 4 வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்;நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன். 5 தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரைநான் தண்டிப்பேன்;கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரைநான் சகிக்கமாட்டேன். 6 நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும்,அவர்கள் என்னோடு வாழ்வார்கள்;குற்றமற்றவனாய் நடப்பவர்களேஎனக்கு ஊழியம் செய்வார்கள். 7 வஞ்சனை செய்யும் யாரும்என் வீட்டில் வாழமாட்டார்கள்;பொய்ப் பேசுபவர் யாரும்என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள். 8 நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும்காலைதோறும் தண்டிப்பேன்;தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும்யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.