Psalms 120 (BOITCV)
undefined சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 1 நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்;அவர் எனக்குப் பதிலளிக்கிறார். 2 யெகோவாவே,பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும்,வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும். 3 வஞ்சக நாவே,இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன?அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்? 4 போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும்,சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார். 5 ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலேவேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே;கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே! 6 சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில்நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. 7 நான் சமாதானத்தை நாடுகிறேன்;அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.