Psalms 120 (IRVT)
undefined ஆரோகண பாடல். 1 என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்;அவர் எனக்குச் செவிகொடுத்தார். 2 யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும். 3 வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்?உனக்கு என்ன செய்யப்படும்? 4 பலவானுடைய கூர்மையான அம்புகளும்,சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும். 5 ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும்,கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்! 6 சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்! 7 நான் சமாதானத்தை நாடுகிறேன்;அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.