Psalms 82 (BOITCV)
undefined ஆசாபின் சங்கீதம். 1 மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்;“கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்: 2 “நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி,கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்? 3 பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்;ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள். 4 பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்;அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள். 5 “அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்;அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்;பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன. 6 “ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்;நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன். 7 ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்;மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.” 8 இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்;ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே.