Psalms 121 (IRVT)
undefined ஆரோகண பாடல். 1 எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராகஎன்னுடைய கண்களை உயர்த்துகிறேன். 2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கினயெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். 3 உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்;உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். 4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. 5 யெகோவா உன்னைக் காக்கிறவர்;யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். 6 பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோஉன்னைச் சேதப்படுத்துவதில்லை. 7 யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார். 8 யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும்இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.