Psalms 142 (IRVT)
undefined குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம். 1 யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். 2 அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்;அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். 3 என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது,நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்;நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். 4 வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும்,என்னை அறிவார் ஒருவரும் இல்லை;எனக்கு அடைக்கலமில்லாமற் போனது;என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. 5 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;நீரே என் அடைக்கலமும்,உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன். 6 என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும்,நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும்,அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள். 7 உமது பெயரை நான் துதிக்கும்படி,என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்;எனக்கு நீர் தயவு செய்யும்போதுநீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.