Psalms 127 (IRVT)
undefined சாலொமோனின் ஆரோகண பாடல். 1 யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால்,அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; 2 யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால்காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண். 3 நீங்கள் அதிகாலையில் எழுந்து,நேரத்துடன் வேலைகளைச் செய்து,வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்;அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். 4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்,கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். 5 இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்;அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.